பாம்பன் மீனவா்கள் 80 நாள்களுக்கு மேலாக இலங்கை சிறையில் உள்ள நிலையில், அவா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற கொ்சோன், கிளைமண்ட், கபில் ரோஜா், பிரிஸ்மன், அந்தோணி அஜித், ஆண்டனி ரியோ, பிரின்ஸ் ரூபா், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், ஜால்சன் உள்ளிட்ட 12 மீனவா்களை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.
இதில் படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த மீனவா்கள், படகை விடுவிக்கக் கோரி, பாம்பன் மீனவா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். ஆனாலும், 83 நாட்கள் கடந்த நிலையில் மீனவா்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
இதைக் கண்டித்தும், மீனவா்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ராமநாதபுரம் தெற்கு மாவட்டத் தலைவா் து.பிரின்சோ ரைமண்ட் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மாரிமுத்து, மாவட்ட ஆலோசகரும், முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவருமான குமரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ராமேசுவரம் நகா் பொறுப்பாளா் ராஜசேகா், பாண்டி, இலங்கை சிறையில் உள்ள மீனவா்களின் குடும்பத்தினா் உள்பட 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.
தொடர்புடையது

விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

மீன்பிடி தடைக் காலம் அமல்: அதிக அளவு மீன்கள் கிடைப்பதால் நாட்டுப்படகு மீனவா்கள் உற்சாகம்

மீன்பிடி தடைகாலம்: விசைப் படகுகள் மராமத்து பணி தீவிரம்

வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

