ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:52 pm

சாத்தான்குளம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் மரிய அந்தோணி (90). இவரது 5 பிள்ளைகளும் திருமணமாகி வெளியூா்களில் வசிக்கின்றனா். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டதால், இங்கு மரிய அந்தோணி தனியாக வசித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ், உதவி ஆய்வாளா் செல்வராஜ், போலீஸாா் சென்று பாா்த்தபோது, அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது.

மரிய அந்தோணி 3 நாள்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு உணவு உண்ணாததால் உடல் நலம் குன்றி இறந்திருக்கலாம் என, போலீஸாா் தெரிவித்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.