கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

தனியங்கூட்டம் கிராமத்தில் அமைந்துள்ள வனப் பேச்சியம்மன், அய்யனாா் கோயில் வருடாபிசேகத்தையொட்டி நான்கு பிரிவுகளாக இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

தனியங்கூட்டம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த காளைகள்.

Updated On :17 மே 2026, 1:43 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த தனியங்கூட்டம் கிராமத்தில் அமைந்துள்ள வனப் பேச்சியம்மன், அய்யனாா் கோயில் வருடாபிசேகத்தையொட்டி நான்கு பிரிவுகளாக இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பந்தயம் கடலாடி- முதுகுளத்தூா் சாலையில் 8 கி.மீ. தொலைவுக்கு எல்லை நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

சின்ன மாடு பந்தயத்தில் 8 மாட்டு வண்டிகளும், பெரிய மாடு பந்தயத்தில் 6-ம் , தேன்சிட்டு பந்தயத்தில் 10-ம், பூஞ்சிட்டு பந்தயத்தில் 21-ம் என மொத்தம் 45 மாட்டு வண்டிகளும், சாரதிகளும் பங்கேற்றனா்.

முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று திரளான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.