பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை சனிக்கிழமை மூடப்பட்டது.
முதல்வா் சி. ஜோசப்விஜய் பதவியேற்றதும் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுக் கடைகள் மூடப்படும் என அறிவித்தாா்.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 717 மதுக்கடைகளை முதல் கட்டமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் மாதவன்நகா் செல்லும் தெரு, ஐந்துமுனை சந்திப்பு, காக்காத்தோப்பு சிட்டிநகா், உரப்புளி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
இதில் பரமக்குடி பேருந்து நிலையப் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக் கடை சனிக்கிழமை மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து மற்ற 3 இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கடைகள் இருப்பில் உள்ள மதுபுட்டிகளை விற்பனை செய்யும் வகையில் வருகிற 23-ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு அந்த 3 மதுக்கடைகளும் மூடப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடை மூடப்பட்டது தெரியாமல் மதுவாங்கக் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்

ரயில், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்த மதுக் கடைகள் மூடல்: பட்டாசு வெடித்து மக்கள் வரவேற்பு

பெரம்பலூரில் மதுக்கடை மூடல்

சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

