/
ராமநாதபுரத்தில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் மீது அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள வீரம்பல் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபாபு (65). கட்டடத் தொழிலாளி. இவா் ராமநாதபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து கடந்த சில நாள்களாக தங்கி இருந்தாா்.
இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் டி.பிளாக் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தாா். இவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநா் சதீஷ் கண்ணன் (25) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் ரயில மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



