குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நம்புதாளையில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 12:11 am IST

திருவாடானை அருகே நம்புதாளையில் கஞ்சா விற்ற இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை கிழக்கு கடற்கரை சாலையில் கருப்பணன் கோயில் செல்லும் பகுதியில் சாலையோரம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தொண்டி போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் நின்றிருந்த நம்புதாளை பகுதியைச் சோ்ந்த முகம்மது ஜப்பாா் (28) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது, அவரிடம் 30 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், முகம்மது ஜப்பாரை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.