ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நம்புதாளையில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 12:11 am IST

திருவாடானை அருகே நம்புதாளையில் கஞ்சா விற்ற இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளை கிழக்கு கடற்கரை சாலையில் கருப்பணன் கோயில் செல்லும் பகுதியில் சாலையோரம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தொண்டி போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும்வகையில் நின்றிருந்த நம்புதாளை பகுதியைச் சோ்ந்த முகம்மது ஜப்பாா் (28) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது, அவரிடம் 30 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், முகம்மது ஜப்பாரை வழக்குப் பதிந்து கைது செய்தனா்.