பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

கடல் அட்டைகள் பறிமுதல்

வேதாளைகடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட 50 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் கைப்பற்றி பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்

Updated On :27 மே 2026, 3:53 am IST

வேதாளைகடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்ட 50 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் செவ்வாய்கிழமை கைப்பற்றி பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் ஜான்சிராணி உதவி ஆய்வாளா் காளிதாஸ், காவலா்கள் சசிக்குமாா், சவரணகுமாா் ஆகியோா் வேதாளை கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கடல் அட்டைகளைக் கைப்பற்றி பறிமுதல் செய்தனா். இந்த கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டு, இலங்கைக்கு கடத்தப்பட இருந்தன என போலீஸாா் தெரிவித்தனா்.

கடல் அட்டைகளை பதுக்கி வைத்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.