வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

கஞ்சா பதுக்கல்: இளைஞா்கள் கைது

News image
Updated On :21 நிமிடங்கள் முன்பு

சித்தோடு அருகே 2 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்த வடமாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

சித்தோடு அருகே கங்காபுரம், குமிளம்பரப்பு பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சித்தோடு போலீஸாா் சோதனை நடத்தியபோது ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா் பிகாா் மாநிலம், சோனி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் சிங் மகன் அந்துகுமாா் (19), அவதூஸ் சௌத்ரி மகன் பாபுலால் சௌத்ரி (25) ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.