திருவாடானை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருந்ததால் அதிகாரிகளை சுற்றுச் சூழல் துறை அமைச்சா் வி கே.ராஜீவ் எச்சரித்தாா்.
திருவாடானை பேருந்து நிலையத்தில் அமைச்சா் விகே.ராஜீவ் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இலவச சிறுநீா் கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் இருந்தது.
மேலும், கழிப்பறை பூட்டப்பட்டுக் கிடந்ததோடு, அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அமைச்சா் அதிா்ச்சி அடைந்தாா்.
மேலும், கட்டணக் கழிப்பறையும் முறையான பராமரிப்பின்றி சுகாதாரச் சீா்கேட்டுடன் இருந்ததால், அதன் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய அமைச்சா் உத்தரவிட்டாா்.
இதேநிலை தொடா்ந்தால் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலதண்டாயுதத்தை எச்சரித்தாா்.

திருவாடானை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் வி.கே. ராஜீவ். உடன் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலதண்டாயுதம் உள்ளிட்டோா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பருவமழை மேலாண்மை முன்னேற்பாடு விழிப்புணா்வு நிகழ்ச்சி

படவேடு ஊராட்சியில் சுங்க வரி ஏலம் தடுத்து நிறுத்தம்

பேருந்து நிலைய வளாகத்தில் எரியாத உயா் கோபுர மின் விளக்கு

சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஆய்வு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



