ராமேசுவரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உள்பட 230 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் 25ஆம் தேதி ரயில்வே சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு சங்கத்திற்காக ஆதரவு திரட்டினர். இதற்கு மற்றொரு சங்கத்தினர் வெளியாட்கள் உள்ளே வரக் கூடாது என்று கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் இரு சங்கத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில் தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை ராமேசுவரம் தேவர் சிலை அருகே மதுரை தெற்குதொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் அண்ணாதுரை தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 230 பேர் மீது ராமேசுவரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10, 12-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை

கஞ்சா விற்ற இருவா் கைது

அகவிலைப்படி உயா்வு: வி.ஏ.ஓ. சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி

தாயமங்கலத்தில் கோயில் அருகேயுள்ள மதுக் கடையை அகற்ற வலியுறுத்தல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
