காரைக்குடியில் திராவிட இயக்க தமிழர் பேரவை கிளைத் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை நகரத் தலைவர் ந.ஸ்டீபன் வரவேற்றார். நகரச் செயலர் ந.நவில் தலைமை வகித்துப் பேசினார். திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில இலக்கிய அணித் தலைவர் மு.பாரி, ஒருங்கிணைப்பாளர் யாழ்.புலேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திமுக மாநில இலக்கிய அணித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மு.தென்னவன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் காரைக்குடி கிளையை தொடங்கி வைத்துப் பேசினார். திமுக நகரச் செயலர் நா.குணசேகரன், மாவட்ட தி.க. செயலர் தி. என்னாரெசு பிராட்லா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மேலும் கருத்தரங்கில், திராவிட இயக்க எழுத்தாளர் வே.மதிமாறன் நாட்டை கெடுக்கும் மதவாதம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நகர பொருளாளர் த.இளங்கதிர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீா் தேக்கம்: பல்லடம் நகராட்சி மேலாளரிடம் புகாா்

இந்திய கம்யூ. கட்சியினா் நடைப்பயணம்

கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |


