எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாணவிக்கு செல்லிடப்பேசியில் தொல்லை: கண்டித்த தந்தைக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பிளஸ் 2 மாணவர் கைது

சிவகங்கையில் வியாழக்கிழமை மாணவிக்கு செல்லிடப்பேசி மூலம்  தொல்லைகொடுத்ததைக்  கண்டித்த, மாணவியின் தந்தை உள்பட இருவர்

News image
Updated On :9 நவம்பர் 2017, 11:39 pm

DIN

சிவகங்கையில் வியாழக்கிழமை மாணவிக்கு செல்லிடப்பேசி மூலம்  தொல்லைகொடுத்ததைக்  கண்டித்த, மாணவியின் தந்தை உள்பட இருவர் கத்தியால் குத்தப்பட்டனர். இது தொடர்பாக மாணவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     சிவகங்கை சீனிவாச நகரைச் சேர்ந்தவர் கருப்பையா(44). இவரது மகள் சிவகங்கையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரை, அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மானாமதுரையைச் சேர்ந்த பெரியசாமி மகன் முனீஸ்வரன் செல்லிடப்பேசி மூலம் அடிக்கடி தொந்தரவு செய்தராம்.  இந்நிலையில் புதன்கிழமை இரவு சிவகங்கை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த மாணவரை மாணவியின் தந்தை கருப்பையா, அவரது மனைவி கண்ணாத்தாள், உறவினரான அருண்பாண்டியன் ஆகியோர் கண்டித்துள்ளனர். அதன்பின்னர், கண்ணாத்தாள் பேருந்தில் ஏறிச்சென்றுள்ளார். கருப்பையா, அருண்பாண்டியன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சிவகங்கை ரயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்தனர்.   அப்போது அவர்களை மாணவர் முனீஸ்வரன் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த இருவரும்  சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸார் முனீஸ்வரன் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் முனீஸ்வரன் அவரது நண்பர்களான கேசவகுமார், ரிஷி ஸ்ரீநிவாஸ் ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.