சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட சில இடங்களில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் தண்ணீர் தொட்டிகள் பயன்பாட்டுக்கு வராத நிலையில் உள்ளது.
திருப்பத்தூர் பேரூராட்சியில் 15 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் பஞ்சத்தினை போக்க அடி பம்புகள் அமைக்கப்பட்டன. பின்னர் அடிபம்புகள் அனைத்தும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது ஒரு சில இடங்களில் ஆழ்குழாய் தண்ணீரின்றி வறண்டும், மோட்டார் பழுதாகி இயங்காத நிலையில் உள்ளது.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நுழைவாயிலில் தண்ணீர் தொட்டி முற்றிலும் சேதமடைந்ததால், செம்மொழிப்பூங்கா அருகில் ரூ.3 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு மின் மோட்டாருடன் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கடந்த 6 மாதங்களாகவே இவை காட்சிப் பொருளாகவே உள்ளது. மருத்துவமனையில் போதிய குடிநீர் வசதி இல்லாத காரணத்தால், இந்த தண்ணீர் தொட்டிகளை செயல்பாட்டிற்கு வர பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் சின்னத்தோப்புத் தெருவில் அடிபம்பு இருந்த இடத்தில் புதிய தொட்டி அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும், மின் இணைப்பு இல்லாததால் தொட்டி பயன்பாட்டிற்கு வராமலே உள்ளது.
கோடைகால தண்ணீர் பஞ்சத்தினை தவிர்க்க பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தண்ணீர் தொட்டிகளை செயல்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

