இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தேவகோட்டை அருகே பூட்டிய வீட்டில் 46 பவுன் நகை திருட்டு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பகலில் பூட்டிய வீட்டை உடைத்து 46 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:37 am IST

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பகலில் பூட்டிய வீட்டை உடைத்து 46 பவுன் நகை திருடப்பட்டுள்ளது.
 தேவகோட்டை அருகே கல்லல் சாலையில் உள்ள பெரியகாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(64). இவர், அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டராம். மாலை திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 46 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் ரேகைகளைப் பதிவு செய்தனர். இது குறித்தப் புகாரின் பேரில் வேலாயுதபட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.