6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழ் கவிஞர்கள் தினவிழா

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  தமிழ் கவிஞர்கள்  தின விழாவை முன்னிட்டு, ஒக்கூர் 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:57 am

DIN

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  தமிழ் கவிஞர்கள்  தின விழாவை முன்னிட்டு, ஒக்கூர்  மாசாத்தியார் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது.
 ஏப். 29ஆம் தேதி பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினத்தை, தமிழக அரசு தமிழ் கவிஞர்கள் தினமாக அறிவித்து, அதனை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. அதனடிப்படையில் சிவகங்கை அருகே ஒக்கூரில் உள்ள தமிழ் கவிஞர் மாசாத்தியார் நினைவுத் தூண் வளாகத்தில்  நடைபெற்ற விழாவுக்கு  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தலைமை வகித்தார். சிவகங்கை  மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். 
இதில் தமிழக கதர் மற்றும் கிராமத்  தொழில்கள்  துறை அமைச்சர் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒக்கூர் மாசாத்தியார்  நினைவுத் தூணுக்கு மாலை அணிவித்து  மரியாதை  செலுத்தினார். இவ்விழாவில் சிவகங்கை கோட்டாட்சியர் ராமபிரதீபன், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பசும்பொன், பேராசிரியர்கள் ரேணுகாதேவி, சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.