மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

புனித அலங்கார அன்னை தேர் பவனி

சிவகங்கையில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி செவ்வாய்க்கிழமை  இரவு நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

சிவகங்கையில் உள்ள புனித அலங்கார அன்னை பேராலய திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி செவ்வாய்க்கிழமை  இரவு நடைபெற்றது.
கடந்த ஆக.6 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்கவும் செபமாலை, நவநாள் பிரார்த்தனை, சிறப்பு திருப்பலி ஆகியன நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான நற்கருணை ஆராதனை, தேர்பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 
இவ்விழாவுக்கு சிவகங்கை மறை மாவட்ட முதன்மைச் செயலர் பாக்கியநாதன் தலைமை வகித்தார்.அதன்பின்னர், புனித அலங்கார அன்னையின் தேர்பவனி நடைபெற்றது. ஆலயத்தின் முன்பு தொடங்கிய தேர்பவனி,மதுரை விலக்கு சாலை, திருப்பத்தூர் சாலை,சத்திய மூர்த்தி தெரு, காந்தி வீதி,அரண்மனை வாசல்,நேரு கடை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னர் மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தது. இதில், அருட்பணி தந்தையர்கள் ஜோ.ஆரோக்கியராஜ்,பிரிட்டோ, பர்மா ஆலயத்தின் பங்கு தந்தை ஜோஜப், சிவகங்கை புனித அலங்கார அன்னை பேராலயத்தின் பங்கு தந்தையர்கள் மரியடெல்லஸ், வல்லபதாஸ், சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.