காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றுவரும் கம்பன் திருவிழா- முத்துவிழாவில் 2-ம் நாள் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் " கம்பன் காலம் முதல் கணினி யுகம் வரை' பழைய சுவடுகளில் புதிய தடங்கள் பதித்த 4 பெண்களின் சேவையைப் பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மனித்தேனீ இரா. சொக்கலிங்கம் தலைமை வகித்து முத்து விழா விருது வழங்கிப் பேசினார். எழுத்துத்துறையில் பாரதி விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியர் தமயந்தி, இசைத்துறையில் இசையாசிரியர், இசைவல்லுநர் என்ற சிறப்புக்குரிய தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பிரமீளா குருமூர்த்தி, குறும்பட இயக்குநர் பரமக்குடி மாலினி ஜீவரத்தினம், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி கிராமத்தில் இலவச ஆட்டிசம் பயிற்சிப் பள்ளி தொடங்கி தன்னலம் கருதாத தொண்டுக்காக சரண்யா - பாபு பிரசாத் இணையர் ஆகியோருக்கு முத்து விழா விருது வழங்கப்பட்டன. விழாவில் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன், பேராசிரியர்கள் சொ. சேதுபதி, மு. பழனியப்பன், மா. சிதம்பரம், கம்பன் கழக துணைத் தலைவர் அரு.வே. மாணிக்கவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

வேடிக்கை பார்க்கும் 'ஆம் ஆத்மி'!

துலா ராசிக்கு பாராட்டு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

