சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அலர்மேல்மங்கை உடனுறை

Updated On :21 மே 2018, 6:22 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அலர்மேல்மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழக இந்துசமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழுள்ள இக்கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா தொடக்கமாக திங்கள்கிழமை நண்பகலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதையொட்டி, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவின், முதல் நாளில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியுடன் சுவாமி சிறப்புஅலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில், அம்சவாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 29-ஆம் தேதி மாலையிலும், தெப்ப உற்சவம் ஜூன் 1- ஆம் தேதியும் நடைபெறுகிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில், அறங்காவலர் குழுத் தலைவர் நா. சீனிவாசன் செட்டியார், கோயில் செயல் அலுவலர் து. பாலதண்டாயுதம் மற்றும் விழாக் குழுவினர், பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.