சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அலர்மேல்மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழக இந்துசமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழுள்ள இக்கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா தொடக்கமாக திங்கள்கிழமை நண்பகலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதையொட்டி, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
விழாவின், முதல் நாளில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவியுடன் சுவாமி சிறப்புஅலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில், அம்சவாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 29-ஆம் தேதி மாலையிலும், தெப்ப உற்சவம் ஜூன் 1- ஆம் தேதியும் நடைபெறுகிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில், அறங்காவலர் குழுத் தலைவர் நா. சீனிவாசன் செட்டியார், கோயில் செயல் அலுவலர் து. பாலதண்டாயுதம் மற்றும் விழாக் குழுவினர், பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழில்நுட்பம் இருக்க பயமேன்? வீட்டின் பாதுகாப்புக்கு சிறந்த யோசனைகள்!

ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு மரண தண்டனை!
வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!

சீரியலில் இருந்து சினிமாவுக்குச் செல்லும் ரேஷ்மா முரளிதரன்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

