சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில், மின்நிலையத்தில் மரங்கள் முறிந்து விழுந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை பிற்பகல் வரை நகரில் வெயில் நிலவியது. மாலை 4 மணியளவில் கருமேகம் திரண்டு, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த காற்றால், காரைக்குடி கழனிவாசல் மின் நிலையத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு, கல்லூரிச் சாலை, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் இரவு 7.45 மணிக்கே மின்விநியோகம் கிடைத்தது. மற்ற பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், நகரே இருளில் மூழ்கியது.
இதனிடையே, மின்வாரியப் பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக மரங்களை அப்புறப்படுத்தி, மின் விநியோகம் வழங்கி வருகின்றனர். மின்வாரியப் பணியாளர்கள் தொடர்ந்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், மின்வாரியப் பொறி யாளர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிரந்தரக் கட்டடங்களில் பணிமனை: தோ்தல் ஆணைய விதிக்கு எதிரான மனு தள்ளுபடி

மணப்பாறையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் ரவிமரியா பிரசாரம்!

மணப்பாறையில் மமக வேட்பாளருக்காக நடிகா் போஸ் வெங்கட் வாக்கு சேகரிப்பு!
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

