சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 30 பேர் காயமடைந்தனர்.
கிருங்காக்கோட்டையில் உள்ள பிரான்மலை கலியுக மெய் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், சிங்கம்புணரி, பிரான்மலை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஒட்டன்சத்திரம், பூலகுறிச்சி, வாரிப்பட்டி, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, மாங்குடி, குன்றக்குடி, தட்டட்டி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
மாடுபிடி வீரர்கள் 3 குழுக்களாக அனுமதிக்கப்பட்டனர். இதில், 30-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக் காசு, வெள்ளிக் காசு, கட்டில், பீரோ, குக்கர், கிரைண்டர், மின்விசிறி, அண்டா, குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், நகரம்பட்டி பூசாரி காளைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.
மேலும், ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிட்ட 10-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வீரத் தமிழச்சி என்ற பெயரில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை, கிருங்காக்கோட்டை கிராம மக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் வாக்குப்பதிவு தொடங்கியது! ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு - நேரலை!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது

பேரவைத் தேர்தல்: மநீம தலைவர் கமல் வாக்களித்தார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

