காரைக்குடியில் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி கல்லூரி மாணவர்களுக்கான கம்ப ராமாயணப் பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் போட்டி நடைபெறவிருக்கிறது.
இதுகுறித்து கம்பன் அறநிலைத் தலைவர் சத்தி அ. திருநாவுக்கரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2019 மார்ச் மாதம் நடைபெறவுள்ள 81-ஆம் ஆண்டு கம்பன் திருநாளையொட்டி காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கல்லூரி மாணவர்களுக்கு கம்ப ராமயணத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கு முதல் பரிசாக ரூ. 2 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 1000-ம் வழங்கப்படும். மேலும் அன்று பிற்பகல் திருக்குறள் பேச்சுப்போட்டியும் நடைபெறும். இதற்கும் முதல் பரிசாக ரூ. 2 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 1000-ம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு கம்பன் அறநிலை செயலாளர் பேராசிரியர் அய்க்கண், கம்பன் மணிமண்டபம், காரைக்குடி -630001 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 04565 - 237600 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94442 73549 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


