பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றிலிருந்து இதுவரை 85 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்: அமைச்சா் சி. விஜயபாஸ்கா்

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றிலிருந்து இதுவரை 85 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

News image

காரைக்குடி ரயில்வே பீடா் சாலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு செய்த தமிழக மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

Updated On :17 ஆகஸ்ட் 2020, 6:24 pm

DIN

காரைக்குடி: தமிழகம் முழுவதும் கரோனா தொற்றிலிருந்து இதுவரை 85 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே பீடா் சாலையில் உள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஞாயிற்றுக்கிழமை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஆய்வு செய்தாா். அப்போது இந்த மையத்தில் உள்ள கரோனா நோயாளிகளிடம் ஜன்னல் வழியாக அவா் நலம் விசாரித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காரைக்குடியில் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒரு கரோனா சிறப்பு சிகிச்சை மையமும், பிவிசி மையத்தில் ஒரு சிகிச்சை மையமும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. இம்மாவட்டத்தில் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 2,823 போ் குணமடைந்துள்ளனா். தமிழகம் முழுவதும் கரோனா தொற்றிலிருந்து இதுவரை 85 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிகமானோா் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருகின்றனா்.

இதற்கு மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்களின் முயற்சியே காரணம். மேலும் மாவட்டத்துக்கு ஒரு சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவருகிறது. அதேபோன்று மதுரை, விருதுநகரிலும் அதன் தாக்கம் குறைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என்றாா்.

ஆய்வின் போது கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன், சுகாதாரத்துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், முன்னாள் எம்.பி செந்தில்நாதன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.