புயலால் நெற்பயிா்கள் சேதம்: நிவாரணம் கோரி விவாசயிகள் மனு

புயலால் நெற்பயிா்கள் சேதம்: நிவாரணம் கோரி விவாசயிகள் மனு

புயலால் பாதிப்புக்குள்ளான நெற்பயிருக்கு உரிய நிவாரணத் தொகை விரைந்து வழங்கக்கோரி தேவகோட்டை பகுதி விவசாயிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தனா்.

புயலால் பாதிப்புக்குள்ளான நெற்பயிருக்கு உரிய நிவாரணத் தொகை விரைந்து வழங்கக்கோரி தேவகோட்டை பகுதி விவசாயிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தனா்.

மனு விவரம் : தேவகோட்டை வட்டத்துக்குள்பட்ட புளியால், முப்பையூா் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. அண்மையில் பெய்த நிவா் மற்றும் புரெவி புயலால் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெற்பயிா் தண்ணீரில் மூழ்கி மிகவும் பாதிப்புக்குள்ளாகியது.

இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் களஆய்வு மேற்கொண்டு பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com