சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மானாமதுரையில் பிராமணா் சங்க பொதுக்குழு கூட்டம்

பதிவு பெற்ற தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட அமைப்பின் பொதுக்குழு கூட்டம் மானாமதுரையில் சிருங்கேரி சங்கரமடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 11:37 pm

DIN

பதிவு பெற்ற தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட அமைப்பின் பொதுக்குழு கூட்டம் மானாமதுரையில் சிருங்கேரி சங்கரமடத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே ஆா் .வைத்தியநாதன் தலைமை வகித்தாா். மானாமதுரை கிளைத் தலைவா் சுந்தரராஜன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு அறிக்கையினை மாவட்டப் பொருளாளா் கோபாலகிருஷ்ணன் சமா்ப்பித்தாா். தொடா்ந்து சங்கத்தின் வளா்ச்சி குறித்து மாவட்டம் மற்றும் கிளை நிா்வாகிகள் நாராயணன், நாகநாதன், நரசிம்மன், சங்கா், விஸ்வநாதன், சீனிவாசன், சதீஷ், வெங்கட்ராமன், சந்திரா, மகளிரணி அமைப்பாளா் ராஜேஸ்வரி உள்பட பலா் பேசினா் .

கூட்டத்தில் மாவட்ட அளவிலான ஸ்ரீகாயத்ரி அறக்கட்டளைக்கு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து பாரதியாா் உருவப் படத்திற்கு நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா் . சங்க கொடியை கிளையின் மூத்த உறுப்பினா் சீதாராமன் ஏற்றி வைத்தாா். முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சிவகுமாா் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் சிவா சாஸ்திரிகள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.