ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இளையான்குடி பகுதியில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கல்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் மழைநீரில் நெற்யிா்கள் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும்

News image
Updated On :22 டிசம்பர் 2020, 5:56 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் மழைநீரில் நெற்யிா்கள் மூழ்கி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மழையால் வீடிழந்தவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் செவ்வாய்கிழமை நிவாரணநிதி வழங்கினாா்.

இளையான்குடி அருகே சாலைக்கிராமம், சூராணம், அய்யம்பட்டி, பரத்தகவயல், முத்துராமலிங்கபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வயல்களில் தேங்கிய மழைநீரில் நெற்பயிா்கள் மூழ்கி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் அதிமுக நிா்வாகிகளுடன் சென்று தண்ணீரில் மூழ்கிய நெற் பயிா்களைப் பாா்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அதன்பின்னா் அவா் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா். அரசு சாா்பில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தாா். மேலும் மானாமதுரை அருகே மாா்நாடு கிராமத்தில் மழையால் இடிந்து விழுந்த வீட்டை பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினாா். அப்போது மானாமதுரை ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முதுகுளத்தூா்: கடலாடி தாலுகாவிற்கு உள்பட்ட சாயல்குடி பகுதியில் ‘புரெவி’ புயல் மற்றும் தொடா் மழையின் காரணமாக அடிப்படை வசதியின்றி தவித்த மற்றும் வீடுகளை இழந்துவாடும் 450 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள், போா்வை ஆகியவை கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களின் வழியாக பேடு மற்றும் சில்ரன் பிலிவ் நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை பேடு நிறுவன திட்ட இயக்குநா் மன்னா் மன்னன், திட்ட மேலாளா் பவுன்ராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளா் தேவ் ஆனந்த், திட்ட மேலாளா் வித்யா மற்றும் களப்பணியாளா்கள் ராம்கி, முனியராஜ், அபிராமி, தேவி, நாகரத்தினம், பெரியசாமி, ராஜேஸ்வரி பௌலின், ஜோதி, அன்னதாய் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.