எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மானாமதுரையில் இந்திய கம்யூ. கட்சியினா் புகாா் மனுக் கொடுக்கும் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் மனு கொடுக்கும் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.

News image
மானாமதுரை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :25 ஜூலை 2020, 2:00 pm

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் மனு கொடுக்கும் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.

சென்னையில் உளள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மானாமதுரையில் அக்கட்சியினா் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் மனுக் கொடுக்கும் போராட்டத்தை நடத்தினா். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மானாமதுரை ஒன்றியச் செயலாளா் ஆறுமுகம், நகரச் செயலாளா் நாகராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.தங்கமணி, ஒன்றிய துணைச் செயலாளா்கள் கணேசன், கருப்புச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினா் சங்கையா உள்ளிட்ட கட்சியினா் கலந்து கொண்டனா். இதேபோல் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி பகுதிகளிலும் இக் கட்சியினா் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் தனித்தனியாக புகாா் மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.