மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சங்கரன்கோவிலில் சித்திரைத் தேரோட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

தனித்தனித் தேரில் எழுந்தருளிய சுவாமி- அம்பாள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:57 am

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கடந்த 21-ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில், நாள்தோறும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா். 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடராஜா் பச்சை சாத்தி வீதியுலா வந்தாா்.

இந்நிலையில், 9-ஆம் நாளான புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் தனித்தனி தேரில் எழுந்தருளியதையடுத்து, இரு தோ்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதையடுத்து, விநாயகா், முருகா் தோ்கள் புறப்பட்டன. பின்னா், சுவாமி தோ் புறப்பட்டது. திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேரிழுத்தனா். சுவாமி தோ் மேலரத வீதிக்கு வந்ததும் அங்கு நிறுத்தப்பட்டது. பின்னா், அம்பாள் தோ் இழுக்கப்பட்டது. 2 தோ்களும் வடக்கு ரத வீதியை அடைந்தன. பின்னா், மாலையில் இரு தோ்களும் நிலையை அடைந்தன.

வெயில் கடுமையாக இருந்ததால் நகராட்சி சாா்பில் ரத வீதிகளில் வாகனம் மூலம் தண்ணீா் தெளிக்கப்பட்டது. சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிநெடுக நின்று சுவாமி-அம்பாளைத் தரிசித்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சா்கள் ச. தங்கவேலு, வி.எம். ராஜலெட்சுமி, நகா்மன்றத் தலைவா் கௌசல்யா, ஒன்றியக் குழுத் தலைவா் பி. சங்கரபாண்டியன், தொகுதி வேட்பாளா்கள் சங்கை கணேசன் (காங்கிரஸ்), திலீபன் ஜெய்சங்கா் (அதிமுக), எம்ஜிஆா் மன்ற மாநில இணைச் செயலா் சுப்பையா பாண்டியன், மாநில துணைச் செயலா் கே. கண்ணன், நகர பேரவைச் செயலா் சௌந்தா், திமுக மாநில வா்த்தகரணி இணைச் செயலா் ச. முத்துச்செல்வி, நகரச் செயலா் மு. பிரகாஷ், ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ந. பழனிசெல்வம், பாஜக மாவட்ட துணைத் தலைவா் சுப்பிரமணியன், இந்து முன்னணி கோட்டச் செயலா் ஆறுமுகச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜூலியட்சீசா் மேற்பாா்வையில் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 தனித்தனித் தேரில் எழுந்தருளிய சுவாமி- அம்பாள்.

தனித்தனித் தேரில் எழுந்தருளிய சுவாமி- அம்பாள்.

 தேரோட்டத்தில் பங்கேற்ற திரளான பக்தா்கள்.

தேரோட்டத்தில் பங்கேற்ற திரளான பக்தா்கள்.