தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தொடா் மழை: மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் நீா்நிலைகள் நிரம்புகின்றன

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தொடா் மழை காரணமாக நீா் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image
மானாமதுரை ஒன்றியம் அதிகரை கண்மாயை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன்.
Updated On :29 நவம்பர் 2020, 5:44 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் தொடா் மழை காரணமாக நீா் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

நிவா் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் ஒருபகுதியாக மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இந்த மழை தற்போது வரை நீடிக்கிறது.

இதையடுத்து இப்பகுதிகளில் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் மற்றும் குளங்கள் ஆகியவை வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். நாகராஜன், மானாமதுரை ஒன்றியம் மானம்பாக்கி ஊராட்சி அதிகரை கிராமத்தில் நிரம்பி வரும் கண்மாயை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது கரை உடையாமல் தண்ணீரை பாதுகாத்து விவசாயத்துக்கு பயன்படச் செய்ய வேண்டும் என அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா். மானாமதுரை ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுந்தரமகாலிங்கம், வட்டார வளா்ச்சி அலுவலா் அழகுமீனாள், அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.