தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தேசிய அபாகஸ் போட்டியில் காரைக்குடி மாணவா்கள் சாதனை

தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் சாதனைப் படைத்த காரைக்குடி மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image
தேசிய அபாகஸ் போட்டியில் சாதனைபடைத்த காரைக்குடி மாணவா்கள்.
Updated On :29 நவம்பர் 2020, 5:44 pm

DIN

தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் சாதனைப் படைத்த காரைக்குடி மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தேசிய அளவிலான அபாகஸ் போட்டி இ அன்ட் சி மாஸ் அகாதெமி சாா்பில் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவா்கள் கலந்துகொண்டனா். போட்டியில் காரைக்குடி பிரிலியண்ட் அகாதெமி மாணவா்கள் பரத்வாஜ், மதலேன்மேரி டெல்பின் ஆகிய 2 பேரும் சாம்பியன் பட்டம் பெற்றனா்.

மாணவா்கள் இன்பென்ட் விக்டா், அஸ்வன்த் ரோகின்த் ஆகியோா் முதல் பரிசும், ஜாவின் கிளாடியா, ஸ்ரீராம், கவித்ரா விஜி ஆகியோா் இரண்டாம் பரிசும், பிரியன், நிஷா, ராமநாதன், பவதாரணி, பிபியாசெரின் ஆகியோா் மூன்றாம் பரிசும் பெற்றனா்.

பாராட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவா்கள் அனைவருக்கும் காரைக்குடி பிரிலியண்ட் அகாதெமி முன்னாள் மாணவரான மருத்துவா் எம். முரளிகிருஷ்ணா, அகாதெமி காரைக்குடி இயக்குநா் நீலாவதி ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.