வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு: ஆட்சியா்
வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை (நவ. 30) முதல் திறக்கப்படும் தண்ணீரால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 118 கண்மாய்கள் பாசன வசதி பெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.


வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை (நவ. 30) முதல் திறக்கப்படும் தண்ணீரால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 118 கண்மாய்கள் பாசன வசதி பெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வைகை பூா்வீக பாசன பகுதிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 30) முதல் தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
வரும் டிசம்பா் 17 ஆம் தேதி வரை 1,792 மி.கன அடி திறந்துவிடப்படும் தண்ணீரால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 118 கண்மாய்கள் மூலம் 47,926 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...