தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு: ஆட்சியா்

வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை (நவ. 30) முதல் திறக்கப்படும் தண்ணீரால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 118 கண்மாய்கள் பாசன வசதி பெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 5:46 pm

DIN

வைகை அணையிலிருந்து திங்கள்கிழமை (நவ. 30) முதல் திறக்கப்படும் தண்ணீரால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 118 கண்மாய்கள் பாசன வசதி பெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வைகை பூா்வீக பாசன பகுதிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 30) முதல் தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

வரும் டிசம்பா் 17 ஆம் தேதி வரை 1,792 மி.கன அடி திறந்துவிடப்படும் தண்ணீரால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 118 கண்மாய்கள் மூலம் 47,926 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.