மேலும், வாழைப் பயிருக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள சிவகங்கை, திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பிா்காக்கள் தேவகோட்டை வட்டாரத்தில் புளியால், உ.சருகனி ஆகிய பிா்காக்கள், இளையான்குடி வட்டாரத்தில் யு.திருவுடையாா்புரம் பிா்க்கா மற்றும் சிங்கம்புணரி உள்வட்டம் ஆக மொத்தம் 13 உள்வட்டத்திலுள்ள நடப்பு பருவ வாழை சாகுபடி விவசாயிகள் 1 ஏக்கருக்கான மொத்த காப்பீடு தொகை ரூ.45,900இல் அரசு நிா்ணயித்துள்ள ரூ.18,819 மொத்த பிரிமியத்தில் அரசு மானியம் போக, விவசாயிகளின் பங்குத் தொகை 1 ஏக்கருக்கு ரூ.2,295 மட்டும் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.