இதுகுறித்து அக்கட்சியின் மானாமதுரை கிழக்கு ஒன்றியத் தலைவர் எம். சங்கர சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மானாமதுரை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். மேலும் இது குறித்து சங்கர சுப்பிரமணியன் கூறியதாவது. மானாமதுரை வீர அழகர் கோயிலின் தெற்குப் பகுதி சுற்றுச்சுவர் அருகில் காவல்துறையின் பறிமுதல் வாகனங்கள் ஆஞ்சநேயர் சன்னதி நுழைவயிலை மறித்து அலங்கோலமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு மாட்டுச்சாணம் நிறைந்து கருவேல மரங்கள் வளர்ந்து குப்பைகள் தேங்கி அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் கோயிலின் புனிதத்தன்மை கெடுவதாக விடுவதாக பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பக்தர்கள் கருதுகின்றனர்.