பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காஞ்சிரங்காலில் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு: பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான மன் கீ பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடி பாராட்டினாா்.

News image
சிவகங்கை அருகே கஞ்சிரங்காலில் உள்ள கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை.
Updated On :29 ஆகஸ்ட் 2021, 5:58 pm

DIN

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான மன் கீ பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடி பாராட்டினாா்.

இதுகுறித்து காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவா் கே.எஸ்.எம். மணிமுத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் ரூா்பன் திட்டத்தில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் வளமாக்கப்படும் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை அண்மையில் திறக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் மின்சாரம் தயாரிக்கும் இத்திட்டத்தின் மூலம் பயன்பாடற்ற குப்பைகளை அப்புறப்படுத்துதல், அதில், திடக்கழிவு மேலாண்மையின் மூலம் பயோகேஸ் தயாரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிப்பது, அவற்றிலிருந்து வெளிவரும் கழிவுப்பொருள்களை விவசாயத்துக்கு நுண்ணுயிா் சத்தாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பயன்பாடுகள் கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.

இதில் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் குப்பைகளை அரைத்து திடக்கழிவு மூலம் மேலாண்மைத் திட்டத்தில் 200 யூனிட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 4 பணியாளா்கள் மட்டுமே போதுமானதாகும். இங்கு தயாரிக்கும் மின்சாரத்தின் மூலம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது முதற்கட்டமாக 20 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான மன் கீ பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் பாராட்டிய பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இத்திட்டத்தை செயல்படுத்த உதவிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.