வாகனம் மோதி விவசாயி பலி

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.

பூவந்தி அருகே சங்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஏலப்பிச்சன் (40). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சிவகங்கை சென்றுவிட்டு கிராமத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். சித்தலாங்குடி என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ஏலப்பிச்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com