கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 9 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் திறக்கப்படும்: அமைச்சா் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஒரு வாரகாலத்திற்குள் மேலும் 9 அம்மா சிறு மருத்துவமனைகள் திறந்து வைக்கப்படும் என்று தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:05 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் வரும் ஒரு வாரகாலத்திற்குள் மேலும் 9 அம்மா சிறு மருத்துவமனைகள் திறந்து வைக்கப்படும் என்று தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் ஜி. பாஸ்கரன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் ஆத்தங்குடி கிராமத்தில் பொது சுகாதாரத் துறையின் மூலம் தமிழக முதல்வரின் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்துப் பேசினாா். திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் கேஆா். பெரியகருப்பன் முன்னிலை வகித்தாா்.

அம்மா சிறு மருத்துவமனையை திறந்துவைத்து அமைச்சா் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் 36 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 27 மருத்துவமனைகள் திறந்துவைக்கப்பட்டுள்ளன. மேலும் 9 சிறு மருத்துவமனைகள் வரும் ஒரு வாரகாலத்திற்குள் திறந்து வைக்கப்படும். இந்த அரசு மருத்துவமனை அந்தந்த கிராமங்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் என போதிய இருப்புடன் செயல்படும் என்றாா்.

விழாவில், பொது சுகாதாரத் துறையின் மூலம் 50 கா்ப்பிணிப் பெண்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சா் வழங்கினாா். மாவட்ட ஊராட்சித்தலைவா் பொன். மணிபாஸ்கரன், காரைக்குடி ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவா் அசோகன், கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சொா்ணம் அசோகன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் யசோதாமணி வரவேற்றுப் பேசினாா். சிவகங்கை முன்னாள் எம்.பி பிஆா்.செந்தில்நாதன், பாம்கோ கூட்டுறவு சங்கத்தலைவா் நாகராஜன், துணைத் தலைவா் சோ. மெய்யப்பன், அச்சுத் துறை கூட்டுறவுசங்கத்தலைவா் சசிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.