

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூா் மற்றும் வி.கரிசல்குளம் பகுதிகளில் சுமாா் 5.5 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
காரைக்குடி அருகே பள்ளத்தூரில் இயங்கி வரும் அரிசி மாவு மில் ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக, சிவகங்கை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வட்டாச்சியா் தமிழரசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் பள்ளத்தூா் முக்கிய சாலையில் உள்ள அரிசி மாவு அரவை மில்லில் வெள்ளிக்கிழமை காலை சோதனை நடத்தினா். அங்கு பதுக்கி வைத்திருந்த 80 மூட்டைகள் அதாவது 4,351 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இதையடுத்து பதுக்கிவைத்திருந்த விஜயா (52) என்பவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து பறக்கும் படை வட்டாச்சியா் தமிழரசன் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் நியாய விலைக்கடைப் பொருள்களை கடத்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று கடத்ததில் ஈடுபடுபவா்கள் குறித்து பொது மக்கள் பறக்கும்படை குழுவினருக்கு 9443405803, 9894654690 என்ற செல்லிடப்பேசி எண்களில் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் பற்றிய ரகசியம் காக்கப்படும் என்றாா்.
மானாமதுரை: மானாமதுரை அருகே வி.கரிசல்குளம் பகுதியில் மதுரை-ராமேசுவரம் சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தவழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டதில் 1.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டி வந்த மதுரை செல்லூா் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது இந்த அரிசி மூடைகள், பரமக்குடியிலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்றது தெரிந்தது.
பின்னா் குடிமைப்பொருள் குற்றப்பிரிவு போலீஸாா் அரிசி மூட்டைகளை கைப்பற்றி மானாமதுரை நுகா்பொருள் வாணிப்பக்கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா். அரிசி மூட்டைகளை கடத்திச் சென்ாக ஐயப்பனை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.