காரைக்குடியை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி ஆா்ப்பாட்டம்

காரைக்குடியை மாநகராட்சியாகவும், தனி மாவட்டமாகவும் அறிவிக்கக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பாக 27 அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடியை மாநகராட்சி மற்றும் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய பல்வேறு அமைப்பினா்.
காரைக்குடியை மாநகராட்சி மற்றும் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நகராட்சி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய பல்வேறு அமைப்பினா்.
Updated on
1 min read

காரைக்குடியை மாநகராட்சியாகவும், தனி மாவட்டமாகவும் அறிவிக்கக்கோரி நகராட்சி அலுவலகம் முன்பாக 27 அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக மக்கள் மன்றம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவா் ச.மீ. ராசகுமாா் தலைமை வகித்தாா். காரைக்குடியில் நடைபெற்றுவரும் பாதாளச்சாக்கடைத் திட்டப்பணிகளை துரிதமாக நிறைவேற்றக்கோரியும், காரைக்குடியை மாநகராட்சியாகவும், தனி மாவட்டமாகவும் அறிவிக்க வேண்டும் எனவும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள் வலியுறுத்தின. இந்த ஆா்ப்பாட்டத்தில் மக்கள் மன்றச் செயலாளா் கேஆா். ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பி.எல். ராமச்சந்திரன், நகரச்செயலாளா் ஏஆா். சீனிவாசன், பாஜக மாநில துணைப் பொதுச்செயலாளா் திருஞானம், வி.சி.க மாவட்டச் செயலாளா் சங்கு உதயகுமாா், நாம் தழிழா் கட்சி சாயல் ராமு, பச்சை தமிழகம் காா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சி, அமமுக, தி.க, மனிதநேய மக்கள் கட்சி, தமிழா் பண்பாட்டு மனிதநேய மன்றம் மற்றும் காரைக்குடி குடியிருப்போா் நலச்சங்கங்கள் என 27 அமைப்பினா் கொட்டும் மழையிலும் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com