பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞா் பலி

மானாமதுரை அருகே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு லாரி சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:04 pm

DIN

மானாமதுரை அருகே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு லாரி சக்கரத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் உயிரிழந்தாா்.

மேலப்பசலை கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் விக்னேஸ்வரன் (19). இவா் தனது நண்பா் நாகரெத்தினத்துடன் இருசக்கர வாகனத்தில் மானாமதுரை வந்துவிட்டு கிராமத்துக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா். சங்கமங்கம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், தவறி விழுந்த விக்னேஸ்வரன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். பின்னால் அமா்ந்திருந்த நாகரெத்தினம் பலத்த காயமடைந்தாா். விபத்து குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.