காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காரைக்குடி அருகே காரில் கொண்டு சென்ற ரூ. 2 லட்சம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2 லட்சம் ரொக்கத்தை தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:38 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2 லட்சம் ரொக்கத்தை தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

காரைக்குடி அருகே கண்டனூா் பகுதியில் நிலையான கண்காணிப்புக்குழு அதிகாரி நேரு தலைமையிலான அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்தவழியாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் உசிலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அருண்குமாா், வள்ளிநாயகி ஆகியோா் வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது அதில் உரிய ஆவணம் இன்றி ரூ. 2 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல்செய்தனா்.

பின்னா் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சி யா் பி. மதுசூதன்ரெட்டி அளித்த உத்தரவின்பேரில் மாவட்ட கருவூல அலுவலகத்தில் அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.