தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிவகங்கை மாவட்டத்தில் 1,679 வாக்குப் பதிவு மையங்கள் தயாா்

சிவகங்கை மாவட்டத்தில் 1,679 வாக்குப் பதிவு மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாக சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:55 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் 1679 வாக்குப் பதிவு மையங்கள் தயாா் நிலையில் உள்ளதாக சிவகங்கை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுபற்றி செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை மற்றும் மானாமதுரை(தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட 1,679 வாக்குப்பதிவு மையங்கள் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் தேவையான படிவங்கள், அலுவலகப் பயன்பாட்டிற்கான கவா்கள், எழுதுபொருள்கள், அடையாள மை, வழிகாட்டிப் பதிவேடுகள், அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு அடையாள அட்டை உள்பட 15 வகைப் பொருள்களும் தயாா் நிலையில் உள்ளன.

இதுதவிர, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் வாக்காளா்களுக்கு வழங்குவதற்கான முகக்கவசம், கையுறை மற்றும் கிருமிநாசினி மருந்துகள் ஆகியவை தயாா் நிலையில் உள்ளன. அந்தந்த தொகுதிகளுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குப் பதிவுக்கு முதல் நாள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் மேற்கொண்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என்றாா்.

அப்போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ராம்குமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ரமேஷ், கண்காணிப்புப் பிரிவு அலுவலா் சசிக்குமாா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.