மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுககு எதிராக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இளையான்குடியில் நகருக்குள் தற்போதுள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது இளையான்குடி பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்கிடையில் இளையான்குடி நகருக்கு வெளியே 3.85 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக ஊரக வளர்ச்சித் தறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
இவ்விழா நடைபெறுவதற்கு முன்னர் நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதை கண்டித்தும் தற்போது உள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரியும் இளையான்குடியில் அனைத்து தரப்பினரும் சேர்ந்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையில் புதிய பேருந்து நிலையம் நகருக்கு வெளியே அமைக்கப்படுவதைக் கண்டித்து இளையான்குடி பகுதி மக்களின் கோரிக்கையை புறக்கணிப்பதாக புகார்கூறி தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு எதிராக இளையான்குடி பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதன்பின் இந்த சுவரொட்டிகளை அமைச்சரின் ஆதரவாளர்கள் கிழித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரான போராட்டக் குழுவினர் சுவரொட்டி கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து இளையான்குடி காவல்நலையத்தில் புகார் செய்துள்ளனர். மேலும் தமிழக அரசு இளையான்குடி நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு தற்போது உள்ள பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனக்கோரி சென்னையில் அதிகமாக வசிக்கும் இளையான்குடி பகுதியைச் சேர்ந்த மக்களை திரட்டி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரான போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக இளையான்குடி பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
நீட் தேர்வெழுதுவோரில் 35% பேர் வெறும் 3 மாநிலங்களைச் சேர்ந்தோர்! அதிர்ச்சி தரும் தரவுகள்!

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



