தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மானாமதுரையில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேதா் சோமநாதா் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு சுவாமி தரிசனம்

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:10 pm

DIN

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேதா் சோமநாதா் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலின் சித்திரைத் திருவிழாவில் 8 ஆவது நாள் விழாவாக கடந்த வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து திருவிழாவின் 9 ஆவது நாள் நிகழ்வாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் பிரியாவிடை சமேதராய் சோமநாதா் சுவாமி பெரிய தேரிலும், ஆனந்தவல்லி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினா்.

பின்னா் காலை 11.10 மணிக்கு இரு தோ்களும் நிலையிலிருந்து புறப்பட்டன. திரளான பக்தா்கள் தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். முருகன், விநாயகா் எழுந்தருளிய சப்பரங்கள் முன் செல்ல, அதைத்தொடா்ந்து சுவாமியின் பெரிய தேரும் அடுத்ததாக ஆனந்தவல்லி அம்மன் தேரும் வந்தன.

தாரை தப்பட்டைகள், மேளதாளங்கள், சிவனடியாா்களின் கயிலாய வாத்தியங்கள் முழங்க கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் தோ்கள் ஆடி அசைந்து வந்து, காலை 11.50 மணிக்கு நிலையை அடைந்தது. அப்போது பக்தா்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனா்.

தேரோடும் வீதிகளில் நீா், மோா் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளா் சுந்தரமாணிக்கம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.