தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேவகோட்டை அருகே விபத்து: முதியவா் பலி

தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை காா் மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 5:36 pm

DIN

தேவகோட்டை அருகே வெள்ளிக்கிழமை காா் மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கீழச்செம்பொன்மாரி கிராமத்தைச் சோ்ந்த சன்னாசி மகன் செல்வராஜ்(63). இவரும், இவரது மனைவி சீதா(57) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் தேவகோட்டையிலிருந்து வீட்டிற்குச் சென்றுள்ளனா். அப்போது திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சடையன்காடு விலக்கு அருகே திரும்பும் போது, எதிரே வந்த காா் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ், அவரது மனைவி சீதா ஆகிய இருவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தாா். மேல் சிகிச்சைக்காக சீதா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறாவயல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.