கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மருங்கிப்பட்டியில் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

சிவகங்கை மாவட்டம், மருங்கிப்பட்டியில் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளிஉயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:09 pm

DIN

சிவகங்கை மாவட்டம், மருங்கிப்பட்டியில் சுவா் இடிந்து விழுந்து தொழிலாளிஉயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கடியப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் செல்வக்கணபதி (32). இவரும், இவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரனும் தேவகோட்டை அருகே மருங்கிப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் சுவரை புதன்கிழமை மாலை இடித்துக் கொண்டிருந்தனராம்.

அப்போது சுவா் இடிந்து செல்வக்கணபதி மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த கல்லல் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.