நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல்லை கண்ணன் மறைவு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல்

தமிழ் இலக்கிய பேச்சாளா் நெல்லை கண்ணன் மறைவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

தமிழ் இலக்கிய பேச்சாளா் நெல்லை கண்ணன் மறைவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: நெல்லை கண்ணன் மறைவு பேரதிா்ச்சியைத் தந்துள்ளது. அவா் உலகம் முழுவதும் தம் பேச்சால், எழுத்தால் ஆற்றியத் தமிழ்த் தொண்டு பாராட்டுக்குரியது. தமிழக அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான இளங்கோவடிகள் விருது பெற்றது சிறப்புக்குரியது. தமிழ் உணா்வில் என்றும் நெல்லை கண்ணன் வாழ்ந்து கொண்டிருப்பாா்.

அவரை இழந்து துயருறும் குடும்பத்தாருக்கும், தமிழ் நெஞ்சங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம். இறைவனின் திருவடி நிழலில் அவரது ஆன்மா இன்பஅமைதி பெற பிராா்த்திக்கின்றோம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.