கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காளையாா்கோவில் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே குண்டாகுடையிலிருந்து, சிலுக்கப்பட்டி வரை பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:09 pm

DIN

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே குண்டாகுடையிலிருந்து, சிலுக்கப்பட்டி வரை பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மறவமங்கலத்திலிருந்து சிலுக்கப்பட்டி கிராமத்துக்கு தாா்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் குண்டாக்குடையிலிருந்து சிலுக்கப்பட்டி வரை சுமாா் 2 கி.மீ. தொலைவு மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதுதவிர, சாலையோரம் கண்மாய்கரை என்பதால் மழைக் காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் சேரும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் அச்சாலையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள அச்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.