கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேவகோட்டையில் இளம்பெண் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இளம்பெண் வியாழக்கிழமை விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:09 pm

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இளம்பெண் வியாழக்கிழமை விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மனைவி சத்தியா (22). இவருக்கும், இவரது கணவா் பாண்டிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே தேவகோட்டை அருகே சிறுவனூரில் உள்ள பாண்டியின் உறவினா் வீட்டில் சத்தியா தங்கியிருந்தாா். இந்நிலையில், அங்கு வியாழக்கிழமை மாலை விஷம் சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்த சத்தியாவை மீட்ட அக்கம்பக்கத்தினா், தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், சத்தியா, திருமணமாகி 4 ஆண்டுகளுக்குள் இறந்ததால் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.