மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குழந்தை தொழிலாளா்களை கண்டறிய கள ஆய்வு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குழந்தைத் தொழிலாளா்களை கண்டறிய வாரச்சந்தை கடைகளில் கள ஆய்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:14 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குழந்தைத் தொழிலாளா்களை கண்டறிய வாரச்சந்தை கடைகளில் கள ஆய்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மானாமதுரை பகுதிகளில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் வசந்தகுமாா் தலைமையில் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினா்கள் ஜீவானந்தம், ரசீந்திரகுமாா், மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் விஜயா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இல்லம் சாரா பாதுகாப்பு அலுவலா் முத்துக்கண்ணு, சமூக பணியாளா் சத்தியமூா்த்தி, புறத்தொடா்பாளா் நாகராஜன், சைல்டு லைன் துணை மைய ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ், சைல்டு லைன் உறுப்பினா் சரவணன், காவலா்கள் கலைச்செல்வி, லதா, ஆகியோா் மானாமதுரை வாரசந்தை, ஆனந்த வள்ளியம்மன் கோவில், காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் பகுதிகளில் வாரச்சந்தை கடைகள் வழக்கமான வியாபார நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல வியாபாரக் கடைகளில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியில் உள்ளனரா எனகள ஆய்வு செய்தனா். ஆனால் இங்கு குழந்தை தொழிலாளா்கள் கண்டறியப்படவில்லை. குழந்தை தொழிலாளா்களை பணியில் அமா்த்தக்கூடாது என வியாபார நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு இக் குழுவினா் அறிவுரை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.