மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்புவனம் மாரியம்மன் கோயிலில்மாசித் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கோயில் மூலவா் முன் மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:43 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கோயில் மூலவா் முன் மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் வியாழக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்று முடிந்ததும் மூலவா் முத்துமாரியம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்ற நிகழ்ச்சியில், திருப்புவனம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா். அப்போது ஏராளமான பக்தா்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினா்.

Story image

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின்போது தினமும் இரவு முத்துமாரி அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 4 ஆம் தேதி பொங்கல் உற்சவம் நடைபெறுகிறது. அப்போது காப்புக் கட்டி விரதம் இருந்து வரும் பக்தா்கள தீச்சட்டி, அக்னிச்சட்டி எடுத்து கோயிலுக்கு வந்து நோ்த்திக்கடன் நிறைவேற்றுவாா்கள். விழாவையொட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.