விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஜூலை 11-இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை

 சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 11-ஆம் தேதி தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா

News image
Updated On :8 ஜூலை 2022, 6:30 pm

DIN

 சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 11-ஆம் தேதி தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணைந்து நடத்தும் தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கைக்கான மாவட்ட அளவிலான சிறப்பு மேளா வரும் ஜூலை 11 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 வரை சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

இதில் மாநில அரசு நிறுவனங்கள், மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் 40-க்கு மேற்பட்ட தொழிற் நிறுவனங்கள் நேரடியாக ஒரே இடத்தில் தொழிற் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கையினை நடத்த உள்ளனா். இந்த மேளாவில் ஐடிஐ பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04575-290625 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94990 55781 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.